June 24, 2008

தலைவாசல்

வணக்கம். இணயம் எனும் வற்றாத நதியின் கரையில் சிப்பிகள் பொறுக்கும் சிறுவன் போல சில வருடங்கள் கழித்தாயிற்று . அந்த நதிக்கரையில் எனக்கென்று சிறு மணல் வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையின் விளைவே இந்த வலைப்பூ. இங்கிருந்து பாடல்கள் முதல் மென்பொருள் வரை பலவற்றை பெற்றுக்கொண்டுள்ளேன் அதற்க்கு சிறிதளவேனும் நன்றிக்கடனாய் சிலவற்றை திருப்பிக் கொடுப்பதாய், மன்னிக்கவும் பகிர்ந்து கொள்வதாய் இருக்கிறேன். என்னவென்று அறிய அடுத்த பதிவுக்கு வருகை தாருங்கள். தங்கள் வரவு நல்வரவாகுக!